அவஜானன்தி1 மாம் மூடா4 மானுஷீம் த1னுமாஶ்ரித1ம் |

1ரம் பா4வமஜானன்தோ1 மம பூ41மஹேஶ்வரம் ||11||

அவஜாநந்தி——அலட்சியப்படுத்துபவர்கள்; மாம்——என்னை; மூடாஹா——மந்தமான புத்தியடையவர்கள்; மாநுஷீம்——மனித; தனும்——வடிவத்தில்; ஆஶ்ரிதம்——எடுத்துக்கொள்ளும்; பரம்——தெய்வீக; பாவம்——ஆளுமையை; அஜானந்தஹ——அறியாமல்; மம——என்; பூத——எல்லா உயிர்களுக்கும்; மஹா—ஈஸ்வரம்——தெய்வீகத்தன்மையை

అనువాదం

BG 9.11: நான் எனது தனிப்பட்ட வடிவத்தில் அவதரிக்கும் பொழுது மந்தமான புத்தியடைய அலட்சியப்படுத்துபவர்களால் என்னை அடையாளம் காண முடியாது. எல்லா உயிர்களுக்கும் மேலான இறைவனாகிய எனது ஆளுமையின் தெய்வீகத்தன்மையை அவர்கள் அறியவில்லை.

వ్యాఖ్యానం

நல்ல ஆசிரியர்கள் எப்போதாவது தங்கள் மாணவர்களை ஆழமற்ற சிந்தனையின் மனநிறைவிலிருந்து, ஆழ்ந்த சிந்தனையின் நிலைக்குத் தள்ள வலுவான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். இங்கே, ஸ்ரீ கிருஷ்ணர் தனது தனிப்பட்ட வடிவத்தின் தெய்வீகத்தன்மையை மறுப்பவர்களை விவரிக்க 'மந்தமான' என்று பொருள்படும் மூட4 என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.

கடவுள் உருவமற்றவர் மற்றும் தனிப்பட்ட வடிவத்தில் வெளிப்பட முடியாது என்று கூறுபவர்கள், கடவுள் சர்வவல்லமையுள்ளவர் மற்றும் எல்லாம் வல்லவர் என்ற வரையறைக்கு முரண்பாடு தெரிவிக்கின்றனர். இந்த முழு உலகையும் படிவங்கள் , வடிவங்கள், மற்றும் வண்ணங்கள் நிறைந்த இறைவன் படைத்துள்ளார். உலகில் எண்ணற்ற வடிவங்களைப் படைக்கும் அற்புதச் சாதனையை அவரால் செய்ய முடிந்தால், தனக்கென ஒரு வடிவத்தை உருவாக்கிக் கொள்ள முடியாதா? கடவுள் கூறுகிறார், ‘எனக்கு தனிப்பட்ட வடிவத்தில் வெளிப்படும் சக்தி இல்லை, எனவே நான் உருவமற்ற ஒளி மட்டுமே.’என்று அவர் கூறுகிறாரா? அவரால் தனிப்பட்ட வடிவத்தை கொண்டிருக்க முடியாது என்று சொல்வது அவரை முழுமையற்றதாக ஆக்குகிறது.

சிறிய ஆத்மாக்களாகிய நாமும் வடிவங்களைக் கொண்டுள்ளோம். கடவுள் ஒரு வடிவத்தை உடையவர் இல்லை என்று ஒருவர் கருதினால், அதன் இயல் விளைவு என்னவென்றால், மனிதர்களை விட அவருக்கு குறைவான சக்தி உள்ளது என்பது . கடவுள் பரிபூரணமாகவும் முழுமையானவராகவும் இருப்பதற்கு, அவர் தனது ஆளுமைக்கான இரண்டு பண்புகளையும் கொண்டிருக்க வேண்டும்-தனிப்பட்ட அம்சம் மற்றும் உருவமற்ற அம்சம். வேத ஶாஸ்திரங்கள் கூறுகின்றன:

அப1ஶ்யம் கோ3பா1ம் அணிப1த்3யமானமா

(ரிக்3 வேத3ம் 1.22.164 ஸூக்11ம் 1.22.164)

‘ஒருபொழுதும் அழியாத சிறுவனாகவும், மாடு மேய்க்கும் குடும்பத்தில் தோன்றியவனாகவும் நான் கடவுளை கண்டேன்.'.

த்3விபூ4ஜம் மௌன முத்3ராத்4யம் வனமாலினமீஶ்வரம்

(கோ3பா1ல் தா11னி உப1நிஷத3ம் 1.13)

‘வன மலர்களின் மாலையை அணிந்த இறைவன் புல்லாங்குழலை வாசித்து, மௌன முத்திரையை வசீகரிக்கும் வகையில் தன் கைகளால் உருவாக்குகிறார்’.

கூ3டம்4 ப1ரம் ப்4ரஹ்ம மனுஷ்ய-லிங்க3ம்

(பா43வத1ம் 7.15.75)

‘கடவுள் மனிதனைப் போன்ற வடிவத்தை ஏற்றுக்கொள்கிறார் என்பதுதான் ஆழமான அறிவு.’

யாத்1ராவதி1ர்ணோ ப43வான் ப1ரமாத்1மா நராக்1ருதி1ஹி

(பா43வத1ம் 9.23.20)

‘அந்த நேரத்தில், எல்லா ஐசுவரியங்களையும் கொண்ட பரம பகவான், மனித வடிவில் அவதரித்தார்.’

ஈஶ்வரஹ ப1ரமஹ கி1ருஷ்ணஹ ஸச்1சி1தா3னந்த3 விக்3ரஹஹ

அநாதி3ராதி3 கோவிந்த3ஹ ஸர்வ கா1ரண கா1ரணம்

(ப்3ரஹ்ம ஸம்ஹிதா1 (5.1)

இந்த வசனத்தில், ப்ரஹ்மா ஸ்ரீ கிருஷ்ணரிடம், 'நித்தியமான, அனைத்தையும் அறிந்த, பேரின்பமான கிருஷ்ணரை நான் வணங்குகிறேன். அவர் ஆரம்பமும் முடிவும் இல்லாதவர் மற்றும் எல்லா காரணங்களுக்கும் காரணமானவர்.’ என்று வணங்குகிறார்

இருப்பினும், கடவுளின் தனிப்பட்ட வடிவத்தைப் பொருத்தவரை, அது ஒரு தெய்வீக வடிவம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், அதாவது அது ஜட வடிவங்களில் காணப்படும் அனைத்து குறைபாடுகளும் அற்றது. கடவுளின் வடிவம் ஸத்-சித்-ஆனந்த்-அது நித்தியமானது, அறிவு நிறைந்தது மற்றும் தெய்வீக பேரின்பத்தால் ஆனது.

அஸ்யாபி1 தே3வ வபு1ஷோ மத்3-அனுக்3ரஹஸ்ய

ஸ்வேச்1சா2-மாயஸ்ய ந து1 பூ41-மாயஸ்ய கோ1’பி

(பா43வத1ம் 10.14.2)

இந்த வசனத்தில், ப்ரஹ்மா பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்கிறார், 'ஓ இறைவனே, உங்கள் உடல் பஞ்ச மஹாபூதத்தால் (ஐந்து பெரிய கூறுகளால் ஆனது); அது தெய்வீகமானது. மற்றும் என்னைப் போன்ற ஆன்மாக்களுக்கு உங்களது அருளை வழங்குவதற்காக உங்கள் சொந்த விருப்பத்தின் மூலம் நீங்கள் இந்த வடிவத்தில் அவதரித்தீர்கள்.’

பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: 'நான் பிறக்காதவனாக இருந்தாலும், அனைத்து உயிரினங்களுக்கும் இறைவனாக இருந்தாலும், அழியாத இயல்புடையவனாக இருந்தாலும், எனது தெய்வீக சக்தியாகிய யோக மாயையால் நான் இந்த உலகில் தோன்றுகிறேன் (4.6).இதன் பொருள் கடவுள் வடிவத்தை கொண்டவர் மட்டுமல்லாமல்அவர் ஒரு அவதாரமாக உலகில் இறங்குகிறார்

ஆன்மாக்களாகிய நாம் ஆதிகாலத்திலிருந்தே உலகில் பிறந்து வருவதால், நாம் மனித உருவில் இருந்தோம் என்பது நம்பத்தகுந்ததாகும், அதே நேரத்தில் கடவுளின் முந்தைய வம்சவளி பூமியில் இருந்தது. நாம் அவதாரத்தைப் பார்த்திருக்கலாம். இருப்பினும், குறைபாடு என்னவென்றால், கடவுளின் வடிவம் தெய்வீகமானது மற்றும் நாம் ஜடக் கண்களைக் கொண்டிருந்தோம். எனவே, அவரை நம் கண்களால் பார்த்தபொழுது, ​​அவருடைய ஆளுமையின் தெய்வீகத்தை அடையாளம் காண முடியவில்லை.

கடவுளின் வடிவத்தின் தெய்வீக இயல்பு ஒவ்வொரு நபருக்கும் அவரது ஆன்மீக சக்தியின் அளவிற்கு மட்டுமே அவரது தெய்வீகம் உணரப்படுகிறது. நன்மையின் குணங்களால் ஈர்க்கப்பட்டவர்கள் அவரைப் பார்க்கும்பொழுது, ​​'ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு சிறப்பு வாய்ந்தவர். அவர் மிகவும் திறமையானவர் ஆனால் நிச்சயமாக கடவுள் இல்லை.’ என்று நினைக்கின்றனர். ஆர்வ முறையின் குணங்களின் கீழ் இருப்பவர்கள் அவரைப் பார்க்கும்பொழுது, ​​‘அவரில் சிறப்பு எதுவும் இல்லை. அவர் நம்மைப் போன்றவர்.'என்று நினைக்கின்றனர்.தமோ குணத்தால் ஆதிக்கம் செலுத்துபவர்கள் அவரைப் பார்க்கும்பொழுது, ​​'அவர் அகங்காரம் கொண்டவர், குணமில்லாதவர், நம்மை விட மோசமானவர்' என்று நினைக்கிறார்கள். கடவுளை உணர்ந்த மகான்கள் மட்டுமே தெய்வீக தரிசனத்தைப் பெற்றதால் அவர் அருளால் அவரைக் கடவுளாக அங்கீகரிக்க முடியும். எனவே, உலகத்தில் அவதாரம் எடுக்கும் பொழுது, ​​அறியாத பொருள் சார்ந்த ஆன்மாக்கள் அவரை அறிவதில்லை என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
9. ராஜா வித்யா யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency